கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் AR/VR மெய்நிகர் ஆய்வகத்தின் மூலம் கடந்த மூன்று மாதங்களில் 544 மாணவர்கள் பயன்பெற்றுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கோவை: கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் AR/VR மெய்நிகர் ஆய்வகத்தை கடந்த மூன்று மாதங்களில் 544 மாணவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

மாணவர்கள் அறிவியல், கணிதம், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் உள்ள சிக்கலான கருத்துகளை முப்பரிமாண காட்சிகள் மற்றும் மெய்நிகர் அனுபவங்கள் மூலம் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் இந்த ஆய்வகம் செயல்பட்டு வருகிறது.
வாரந்தோறும் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் மெய்நிகர் கற்றல் அமர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆசிரியர்கள் ஸ்மார்ட் டிஸ்ப்ளே, VR ஹெட்செட்கள் மற்றும் கன்ட்ரோலர்களைப் பயன்படுத்தி பாடங்களை விளக்குகின்றனர்.
கடந்த ஜூன் மாதத்தில் 45 அமர்வுகள், ஜூலையில் 52 அமர்வுகள், ஆகஸ்டில் 35 அமர்வுகள் என மூன்று மாதங்களில் மொத்தம் 132 அமர்வுகள் நடைபெற்றுள்ளன. இதன் மூலம் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
ஒவ்வொரு அமர்வும் ஆசிரியர் மேற்பார்வையில் நடத்தப்படுவதுடன், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு VR உபகரணங்கள் பயன்பாட்டுக்குப் பிறகு முறையாக சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
மாணவர்களின் நவீன கற்றல் தேவைகளை கருத்தில் கொண்டு, பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறைகளுடன் உயர்தர மெய்நிகர் ஆய்வகமும் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் அனுபவத்தை வழங்கும் முயற்சியாக இது செயல்பட்டு வருகிறது.
மாணவர்கள் அறிவியல், கணிதம், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் உள்ள சிக்கலான கருத்துகளை முப்பரிமாண காட்சிகள் மற்றும் மெய்நிகர் அனுபவங்கள் மூலம் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் இந்த ஆய்வகம் செயல்பட்டு வருகிறது.
வாரந்தோறும் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் மெய்நிகர் கற்றல் அமர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆசிரியர்கள் ஸ்மார்ட் டிஸ்ப்ளே, VR ஹெட்செட்கள் மற்றும் கன்ட்ரோலர்களைப் பயன்படுத்தி பாடங்களை விளக்குகின்றனர்.
கடந்த ஜூன் மாதத்தில் 45 அமர்வுகள், ஜூலையில் 52 அமர்வுகள், ஆகஸ்டில் 35 அமர்வுகள் என மூன்று மாதங்களில் மொத்தம் 132 அமர்வுகள் நடைபெற்றுள்ளன. இதன் மூலம் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
ஒவ்வொரு அமர்வும் ஆசிரியர் மேற்பார்வையில் நடத்தப்படுவதுடன், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு VR உபகரணங்கள் பயன்பாட்டுக்குப் பிறகு முறையாக சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
மாணவர்களின் நவீன கற்றல் தேவைகளை கருத்தில் கொண்டு, பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறைகளுடன் உயர்தர மெய்நிகர் ஆய்வகமும் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் அனுபவத்தை வழங்கும் முயற்சியாக இது செயல்பட்டு வருகிறது.