சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை: கோவையில் பெண் மருத்துவர் திருமணம் ஆகி 6 மாதம் ஆன நிலையில் தற்கொலை செய்து கொண்டதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் அபிஷேக் (30). இவர் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி ராசி (27) இருவருக்கும் திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது.
ராசி கடந்த 2020-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் .படித்து முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். மேற்கொண்டு பி.ஜி படிப்பிற்காக நீட் தேர்வு எழுத தயாராகி வந்துள்ளார்.மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கி நீட் தேர்வுக்கு படித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மருத்துவர் ராசி வீட்டின் மூன்றாவது மாடியில் படிக்கச் செல்வதாகக் கூறி விட்டுச் சென்றவர் அறையிலிருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் ராசி கீழே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் மேலே சென்று பார்த்த போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து, மேட்டுப்பாளையம் போலிசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராசிக்கு திருமணம் ஆகி 6 மாதம் மட்டுமே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வருகிறது. பெண் மருத்துவர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டாரா ? குடும்ப பிரச்சனை காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் அபிஷேக் (30). இவர் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி ராசி (27) இருவருக்கும் திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது.
ராசி கடந்த 2020-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் .படித்து முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். மேற்கொண்டு பி.ஜி படிப்பிற்காக நீட் தேர்வு எழுத தயாராகி வந்துள்ளார்.மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கி நீட் தேர்வுக்கு படித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மருத்துவர் ராசி வீட்டின் மூன்றாவது மாடியில் படிக்கச் செல்வதாகக் கூறி விட்டுச் சென்றவர் அறையிலிருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் ராசி கீழே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் மேலே சென்று பார்த்த போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து, மேட்டுப்பாளையம் போலிசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராசிக்கு திருமணம் ஆகி 6 மாதம் மட்டுமே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வருகிறது. பெண் மருத்துவர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டாரா ? குடும்ப பிரச்சனை காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.