பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தனை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
Coimbatore: கோவை: பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த அரசுப் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தனை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் வழக்கம்போல் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி பேருந்தில் பயணம் செய்துள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர் படிக்கட்டு அருகே நின்றபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அதே பேருந்தில் பயணம் செய்த நபர் ஒருவர் மாணவிக்கு உதவுவது போல் நடித்து, அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, ஈச்சனாரி அருகே உள்ள தனது கல்லூரி நிறுத்தத்தில் இறங்கி, பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மாணவியிடம் பாலியல் தொல்லை அளித்தது போத்தனூர் காவல் நிலைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, காவலர் மணிவேந்தன் மீது வழக்குப் பதிவு செய்த பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து, மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலரே, பேருந்தில் கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Des: பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தனை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் வழக்கம்போல் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி பேருந்தில் பயணம் செய்துள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர் படிக்கட்டு அருகே நின்றபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அதே பேருந்தில் பயணம் செய்த நபர் ஒருவர் மாணவிக்கு உதவுவது போல் நடித்து, அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, ஈச்சனாரி அருகே உள்ள தனது கல்லூரி நிறுத்தத்தில் இறங்கி, பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மாணவியிடம் பாலியல் தொல்லை அளித்தது போத்தனூர் காவல் நிலைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, காவலர் மணிவேந்தன் மீது வழக்குப் பதிவு செய்த பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து, மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலரே, பேருந்தில் கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Des: பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தனை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.