கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை காணிக்கையாக கிடைத்தது. கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
Coimbatore: முருகனின் ஏழாம் படை வீடாக போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் புதன்கிழமை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக மொத்தம் ரூ.76.25 லட்சம் வசூலானது.
கோயில் நிர்வாகம் வெளியிட்ட தகவலின்படி, நிரந்தர உண்டியலில் ரூ.72.37 லட்சம், காசோலை உண்டியலில் ரூ.2.32 லட்சம், திருப்பணி உண்டியலில் ரூ.1.55 லட்சம் என மொத்தம் ரூ.76.25 லட்சம் காணிக்கையாக கிடைத்தது.
இதனுடன், 50.500 கிராம் தங்கம், 2.40 கிலோ வெள்ளி மற்றும் 35.600 கிலோ பித்தளை ஆகியவையும் பக்தர்களின் காணிக்கையாக பெறப்பட்டன.
உண்டியல் எண்ணும் பணியை கோயில் தக்கார் ஜெயக்குமார், இணை ஆணையர்கள் விமலா மற்றும் சாமிநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு கண்காணித்தனர்.
சமீபத்தில் கோவை கோனியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கையின்போது நடைபெற்ற திருட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, மருதமலை கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் அனைவரும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தனி அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. மேலும், பணியின்போது காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கோயில் நிர்வாகம் வெளியிட்ட தகவலின்படி, நிரந்தர உண்டியலில் ரூ.72.37 லட்சம், காசோலை உண்டியலில் ரூ.2.32 லட்சம், திருப்பணி உண்டியலில் ரூ.1.55 லட்சம் என மொத்தம் ரூ.76.25 லட்சம் காணிக்கையாக கிடைத்தது.
இதனுடன், 50.500 கிராம் தங்கம், 2.40 கிலோ வெள்ளி மற்றும் 35.600 கிலோ பித்தளை ஆகியவையும் பக்தர்களின் காணிக்கையாக பெறப்பட்டன.
உண்டியல் எண்ணும் பணியை கோயில் தக்கார் ஜெயக்குமார், இணை ஆணையர்கள் விமலா மற்றும் சாமிநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு கண்காணித்தனர்.
சமீபத்தில் கோவை கோனியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கையின்போது நடைபெற்ற திருட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, மருதமலை கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் அனைவரும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தனி அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. மேலும், பணியின்போது காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.