ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.


Coimbatore: கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கடவு எண். 3-ல் மேம்பாலம் அமைக்க உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரி, பொதுமக்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனு அனுப்பி உள்ளனர்.

ஒண்டிப்புதூர் சிவலிங்கபுரம் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் பகுதி பொதுமக்கள் சார்பாக இந்த ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே பாலம் கட்டுவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சருக்கு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

கோவை ஒண்டிப்புதூர் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் V. தெய்வேந்திரன் தலைமையில், சிவலிங்கபுரம் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் V. சொக்கலிங்கம், செயலாளர் S. சுப்பிரமணியன் ஆகியோரின் முன்னிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஒண்டிப்புதூர் தபால் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுகூடி, முதலமைச்சருக்கு கோரிக்கை தபால்களை அனுப்பினர். பொதுமக்களின் நலன், போக்குவரத்து நெரிசலுக்கான நிரந்தரத் தீர்வு மற்றும் நகரின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த மேம்பாலம் அவசியம் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாநகராட்சி கூட்டத்தில் ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் அமைக்க மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி, பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றும் ஒண்டிப்புதூர் சிவலிங்கபுரம் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் பகுதி பொதுமக்கள் சார்பாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள்.

இப்பகுதியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் அன்றாட பயண சிரமங்களை கருத்தில் கொண்டு, உடனடியாக மேம்பாலம் கட்டும் பணிகளை தொடங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Newsletter

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...