ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.


Coimbatore: கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கடவு எண். 3-ல் மேம்பாலம் அமைக்க உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரி, பொதுமக்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனு அனுப்பி உள்ளனர்.

ஒண்டிப்புதூர் சிவலிங்கபுரம் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் பகுதி பொதுமக்கள் சார்பாக இந்த ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே பாலம் கட்டுவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சருக்கு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

கோவை ஒண்டிப்புதூர் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் V. தெய்வேந்திரன் தலைமையில், சிவலிங்கபுரம் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் V. சொக்கலிங்கம், செயலாளர் S. சுப்பிரமணியன் ஆகியோரின் முன்னிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஒண்டிப்புதூர் தபால் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுகூடி, முதலமைச்சருக்கு கோரிக்கை தபால்களை அனுப்பினர். பொதுமக்களின் நலன், போக்குவரத்து நெரிசலுக்கான நிரந்தரத் தீர்வு மற்றும் நகரின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த மேம்பாலம் அவசியம் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாநகராட்சி கூட்டத்தில் ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் அமைக்க மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி, பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றும் ஒண்டிப்புதூர் சிவலிங்கபுரம் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் பகுதி பொதுமக்கள் சார்பாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள்.

இப்பகுதியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் அன்றாட பயண சிரமங்களை கருத்தில் கொண்டு, உடனடியாக மேம்பாலம் கட்டும் பணிகளை தொடங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Newsletter

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...