'முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்'- கோவையில் பெரியார் படிப்பகம் முன்பு நினைவேந்தல் நிகழ்ச்சி..!

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் படிப்பகம் முன்பு நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள், தமிழ் புலிகள் கட்சியினர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


கோவை: முள்ளிவாய்க்காலில் தமிழ் இனப்படுகொலை செய்யப்பட்டு 13-ம் ஆண்டுகள் ஆன நிலையில் 13-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவையில் காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் படிப்பகம் முன்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.



தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் மெழுகுவர்த்தி ஏந்தி, வீரவணக்கம் என்ற முழக்கமிட்டு அஞ்சலி செலுத்தினர்.



இதில் விடுதலை சிறுத்தைகள், தமிழ் புலிகள் கட்சியினர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...