30 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளன் விடுதலை: திருப்பூரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை வரவேற்று திருப்பூரில் திராவிடர் விடுதலை கழகத்தினர் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.


திருப்பூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை இன்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை வரவேற்று திருப்பூர் பெரியார் சிலை முன்பு திராவிடர் விடுதலை கழகத்தினர், பேரறிவாளனுக்கு விடுதலை அளித்த உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்து அதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.



பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



இதே போல் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...