பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை வரவேற்று திருப்பூரில் திராவிடர் விடுதலை கழகத்தினர் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
திருப்பூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை இன்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை வரவேற்று திருப்பூர் பெரியார் சிலை முன்பு திராவிடர் விடுதலை கழகத்தினர், பேரறிவாளனுக்கு விடுதலை அளித்த உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்து அதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இதே போல் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இந்த தீர்ப்பு தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை வரவேற்று திருப்பூர் பெரியார் சிலை முன்பு திராவிடர் விடுதலை கழகத்தினர், பேரறிவாளனுக்கு விடுதலை அளித்த உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்து அதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இதே போல் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.