கோவையில் அதிமுக நிர்வாகிக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் வளாகத்தில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி!

கோவை சூலூர் அருகே அதிமுக நிர்வாகிக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் வளாகத்தில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை சூலூர் பாப்பம்பட்டி - செட்டிபாளையம் சாலையில் அதிமுக சூலூர் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சக்திவேலுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது.

அந்த வளாகத்தில் இரண்டு சிறிய அளவிலான அறைகள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த அறைகள் கட்ட அஸ்திவாரம் போடவில்லை என கூறப்படுகிறது. அதில் ஒரு அறை ஏ.டி.எம் மையத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மற்றொரு அறையில் ஜன்னல் வைக்க ஒரு பகுதியில் சுவர் இடிக்கப்பட்டது.

இந்த பணியில் வேளாண்குடியை சேர்ந்த தொழிலாளி சிவா மற்றும் கோபால்சாமி ஆகிய இரண்டு பேர் ஈடுபட்டிருந்தனர்.



அப்போது திடீரென சுவர் இடிந்து உள்ளே பணியில் இருந்த சிவா மற்றும் கோபால்சாமி ஆகிய இருவர் மீது விழுந்துள்ளது.



இதில் சிவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோபால்சாமி காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் சிவா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...