கோவை பூ மார்க்கெட் மற்றும் வடவள்ளியில் 67-கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் - மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

ரூ.12,600-அபராதம் விதித்து, ஒலிபெருக்கி மூலம் பிளாஸ்டிக் பை பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட தடை குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கோவை: கோவை பூ மார்க்கெட் மற்றும் வடவள்ளியில் 67-கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.12,600-அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த 2019-முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், துணிப்பை அல்லது அதிகளவு மைக்கிரான் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட பைகள் மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால், அவ்வப்போது கோவையில் மாநகராட்சி அதிகாரிகள் கடைகள், உணவகங்கள், சந்தைகளில் ஆய்வு மேற்கொண்டு தடையை மீறி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வரும் கடைகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

மேலும், பிளாஸ்டிக் பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், கோவை மாநகராட்சியில் பூ மார்க்கெட் மற்றும் வடவள்ளி பகுதியில் சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் திடீர் என ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது அங்கிருந்த கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 67-கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.12,600-அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, ஒலிபெருக்கி மூலம் பிளாஸ்டிக் பை பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட தடை குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், பல்வேறு கடைகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...