புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வீடு புகுந்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் தனியார் வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 12-சவரன் நகை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (39). இவர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் வங்கியில் (YES BANK) மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், பிரபு கடந்த 13-ஆம் தேதி தனது குடும்பத்துடன் பழனிக்கு சென்றுள்ளார். இரண்டு நாட்கள் அங்கேயே தங்கியிருந்த நிலையில், நேற்று மீண்டும் இரவு வந்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 12-சவரன் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்துபிரபுதுடியலூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில்வழக்குப்பதிவு செய்த போலீசார், வீட்டில் பதிவான கைரேகையை பதிவு செய்தனர். மேலும், வீடு புகுந்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (39). இவர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் வங்கியில் (YES BANK) மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், பிரபு கடந்த 13-ஆம் தேதி தனது குடும்பத்துடன் பழனிக்கு சென்றுள்ளார். இரண்டு நாட்கள் அங்கேயே தங்கியிருந்த நிலையில், நேற்று மீண்டும் இரவு வந்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 12-சவரன் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்துபிரபுதுடியலூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில்வழக்குப்பதிவு செய்த போலீசார், வீட்டில் பதிவான கைரேகையை பதிவு செய்தனர். மேலும், வீடு புகுந்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.