கோவை கண்ணப்பநகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி நிர்வாகிகள் தேர்தலின் போது பெண் உதவி ஆய்வாளர் மற்றும் பள்ளியின் முன்னாள் தலைவரிடம் ஏற்பட்ட தகராறு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கோவை: கோவை கண்ணப்பநகர் பகுதியில் பொதுமக்கள் பங்களிப்புடன் சங்கமம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி என்ற ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளி மற்றும் சங்கமம் மெட்ரிகுலேஷன் என்ற எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி செயல்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் 150 உறுப்பினர்களுடன் சங்க விதிகளுக்குட்பட்டு தொடங்கப்பட்ட பள்ளி நிர்வாகத்தில் உறுப்பினர்கள் பலர் வெளியேறிய நிலையில் தற்போது 27 பேர் மட்டுமே ஆயுள் சந்தா நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த சூழலில் நேற்று பள்ளி நிர்வாக தேர்தல் நடைபெற்றது. அப்போது தற்போது நிர்வாக குழுவில் உள்ளவர்கள் உறுப்பினர்களாக இல்லாத சிலர் பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்க வைப்பதாக கூறி உறுப்பினர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரத்தினபுரி போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சென்ற பெண் காவல் உதவி ஆய்வாளரிடம் முன்னாள் தலைவர் சந்திரசேகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது இருவரும் ஒருமையில் பேசிக் கொண்டதுடன், திடீரென உதவி ஆய்வாளர், சந்திரசேகரின் சட்டையை பிடித்து வெளியே இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சந்திரசேகர், பெண் உதவி ஆய்வாளர் கையை தட்டி விட்டுள்ளார். இதனால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் போலீசார் அவரை வெளியே அழைத்துச் சென்று சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து அங்கு நடைபெற்ற தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. முறையான விசாரணைக்கு பின் அல்லது நீதிமன்ற வழக்கு மூலம் தீரத்து கொள்ள அறிவுறுத்தி அங்கு கூடியவர்களை கலைய செய்தனர். இதனிடையே பெண் உதவி ஆய்வாளர் மற்றும் சந்திரசேகரிடம் ஏற்பட்ட தகராறு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஆரம்பத்தில் 150 உறுப்பினர்களுடன் சங்க விதிகளுக்குட்பட்டு தொடங்கப்பட்ட பள்ளி நிர்வாகத்தில் உறுப்பினர்கள் பலர் வெளியேறிய நிலையில் தற்போது 27 பேர் மட்டுமே ஆயுள் சந்தா நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த சூழலில் நேற்று பள்ளி நிர்வாக தேர்தல் நடைபெற்றது. அப்போது தற்போது நிர்வாக குழுவில் உள்ளவர்கள் உறுப்பினர்களாக இல்லாத சிலர் பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்க வைப்பதாக கூறி உறுப்பினர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரத்தினபுரி போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சென்ற பெண் காவல் உதவி ஆய்வாளரிடம் முன்னாள் தலைவர் சந்திரசேகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது இருவரும் ஒருமையில் பேசிக் கொண்டதுடன், திடீரென உதவி ஆய்வாளர், சந்திரசேகரின் சட்டையை பிடித்து வெளியே இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சந்திரசேகர், பெண் உதவி ஆய்வாளர் கையை தட்டி விட்டுள்ளார். இதனால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் போலீசார் அவரை வெளியே அழைத்துச் சென்று சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து அங்கு நடைபெற்ற தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. முறையான விசாரணைக்கு பின் அல்லது நீதிமன்ற வழக்கு மூலம் தீரத்து கொள்ள அறிவுறுத்தி அங்கு கூடியவர்களை கலைய செய்தனர். இதனிடையே பெண் உதவி ஆய்வாளர் மற்றும் சந்திரசேகரிடம் ஏற்பட்ட தகராறு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.