கோவையில் முதல்வர் திறந்து வைக்கும் 'பொருநை' கண்காட்சி - வ.உ.சி மைதானத்தில் ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு…!

கோவை வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் "பொருநை" அகழ்வாராய்ச்சி கண்காட்சியை வரும் மே 19 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகளை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் "பொருநை" அகழ்வாராய்ச்சி கண்காட்சியை வரும் மே 19 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகளை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அவருடன், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், காவல் ஆணையாளர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, வரும் 19 தேதி தமிழக முதல்வர் வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவையில் ஓராண்டு சாதனை புகைப்பட கண்காட்சி மற்றும் "பொருநை" அருங்காட்சியகம் கண்காட்சிகளை மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கிறார். அதற்குப் பின், ரெசிடென்சி ஓட்டலில் தொழில் முனைவோர்கள் கலந்துரையாடல் நடத்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கவுள்ளனர்.

முதல்வர் வருகையையொட்டி 10 இடங்களில் பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஓராண்டில் பல்வேறு நலத்திட்டங்களை கோவைக்கு முதல்வர் வழங்கியுள்ளார். அந்த சாதனைகள் அனைத்தும் கண்காட்சியில் இடம்பெற உள்ளது.

நாளை மாலைக்குள் கண்காட்சி ஏற்பாட்டு பணிகள் முடிவடையும், அதற்கான சிறப்பான ஏற்பாடுகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறவுள்ள கண்காட்சியை, பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் கண்டுகளிக்கலாம் என தெரிவித்தார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...