கோவையில் முதல்வர் திறந்து வைக்கும் 'பொருநை' கண்காட்சி - வ.உ.சி மைதானத்தில் ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு…!

கோவை வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் "பொருநை" அகழ்வாராய்ச்சி கண்காட்சியை வரும் மே 19 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகளை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் "பொருநை" அகழ்வாராய்ச்சி கண்காட்சியை வரும் மே 19 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகளை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அவருடன், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், காவல் ஆணையாளர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, வரும் 19 தேதி தமிழக முதல்வர் வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவையில் ஓராண்டு சாதனை புகைப்பட கண்காட்சி மற்றும் "பொருநை" அருங்காட்சியகம் கண்காட்சிகளை மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கிறார். அதற்குப் பின், ரெசிடென்சி ஓட்டலில் தொழில் முனைவோர்கள் கலந்துரையாடல் நடத்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கவுள்ளனர்.

முதல்வர் வருகையையொட்டி 10 இடங்களில் பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஓராண்டில் பல்வேறு நலத்திட்டங்களை கோவைக்கு முதல்வர் வழங்கியுள்ளார். அந்த சாதனைகள் அனைத்தும் கண்காட்சியில் இடம்பெற உள்ளது.

நாளை மாலைக்குள் கண்காட்சி ஏற்பாட்டு பணிகள் முடிவடையும், அதற்கான சிறப்பான ஏற்பாடுகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறவுள்ள கண்காட்சியை, பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் கண்டுகளிக்கலாம் என தெரிவித்தார்.



Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...