நூல் விலை உயர்வு: கையில் கருப்பு பட்டை அணிந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூக்கில் தொங்குவது போன்று ஆர்ப்பாட்டம்!

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையில் கருப்பு பட்டை அணிந்து கொண்டு தூக்கில் தொங்குவது போன்ற நூதன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


திருப்பூர்: கடந்த சில மாதங்களாக நூல் விலை அபரிதமாக உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் இம்மாத தொடக்கத்தில் 40 ரூபாய் வரை விலை உயர்ந்து தற்போது 470 ரூபாய் வரை நூல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



இதனால் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வரக்கூடிய சூழ்நிலையில் உடனடியாக மத்திய அரசு இதனை கவனத்தில் கொண்டு பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும்.

நூல் இறக்குமதிக்கான வரியை ரத்து செய்ய வேண்டும். பருத்தி மற்றும் நூலை அத்தியாவசிய பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கம் சார்பில் இன்றும் நாளையும் திருப்பூரில் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.



இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாகவும் உடனடியாக மத்திய அரசு தொழில் அமைப்புகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கையில் கருப்பு பட்டை அணிந்து, நூல் விலை இதே போல் உயர்ந்து வந்தால் திருப்பூர் பின்னலாடை தொழில் முழுவதும் நலிவடைந்தால் தற்கொலை செய்யக் கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதை சித்தரிக்கும் வகையில் தூக்கில் தொங்குவது போல நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...