நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையில் கருப்பு பட்டை அணிந்து கொண்டு தூக்கில் தொங்குவது போன்ற நூதன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திருப்பூர்: கடந்த சில மாதங்களாக நூல் விலை அபரிதமாக உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் இம்மாத தொடக்கத்தில் 40 ரூபாய் வரை விலை உயர்ந்து தற்போது 470 ரூபாய் வரை நூல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வரக்கூடிய சூழ்நிலையில் உடனடியாக மத்திய அரசு இதனை கவனத்தில் கொண்டு பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும்.
நூல் இறக்குமதிக்கான வரியை ரத்து செய்ய வேண்டும். பருத்தி மற்றும் நூலை அத்தியாவசிய பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கம் சார்பில் இன்றும் நாளையும் திருப்பூரில் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாகவும் உடனடியாக மத்திய அரசு தொழில் அமைப்புகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கையில் கருப்பு பட்டை அணிந்து, நூல் விலை இதே போல் உயர்ந்து வந்தால் திருப்பூர் பின்னலாடை தொழில் முழுவதும் நலிவடைந்தால் தற்கொலை செய்யக் கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதை சித்தரிக்கும் வகையில் தூக்கில் தொங்குவது போல நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனால் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வரக்கூடிய சூழ்நிலையில் உடனடியாக மத்திய அரசு இதனை கவனத்தில் கொண்டு பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும்.
நூல் இறக்குமதிக்கான வரியை ரத்து செய்ய வேண்டும். பருத்தி மற்றும் நூலை அத்தியாவசிய பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கம் சார்பில் இன்றும் நாளையும் திருப்பூரில் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாகவும் உடனடியாக மத்திய அரசு தொழில் அமைப்புகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கையில் கருப்பு பட்டை அணிந்து, நூல் விலை இதே போல் உயர்ந்து வந்தால் திருப்பூர் பின்னலாடை தொழில் முழுவதும் நலிவடைந்தால் தற்கொலை செய்யக் கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதை சித்தரிக்கும் வகையில் தூக்கில் தொங்குவது போல நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.