கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து தினமும் 200-டன் குப்பைகள் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்ப முடிவு..!

வெள்ளலூர் குப்பை கிடங்கு மூலம் 150-டன் குப்பைகள் செல்லும் நிலையில் தினமும் 200-டன் குப்பைகள் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்ப மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கு மூலம் தினமும் 200-டன் குப்பைகள் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்ப மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100-வார்டு பகுதிகளில் இருந்து வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு தினமும் 800-டன் முதல் 1000-டன் வரை குப்பைகள் சேகரித்து அனுப்பப்படுகின்றன.

இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்காமல் குப்பைகளை அனுப்புவதால் மீத்தேன் எரிவாயு உருவாகி வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ விபத்தும் அடிக்கடி ஏற்படும். இதனைத் தடுக்கும் விதமாகவும், வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு வரும் குப்பைகளைக் குறைக்கவும், மாநகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் 69-மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் என்ற சிறு மறுசுழற்சி மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டன.

இதில் 5-க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இதனிடையே, கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கடந்த 10-ஆண்டுகளாக சுமார் 66-ஏக்கரில் பல லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அழிக்கப்படாமல் இருந்தது. இதனை பயோ மைனிங் முறையில் அழித்திட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இதன் பயனாக 16-ஏக்கர் அளவில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் அழிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள குப்பைகளை அழிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருள் பயன்பாட்டுக்காக தினமும் வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து 150-டன் வரை குப்பைகள் பிரித்து அனுப்பப்படுகின்றன. இதனை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து தினமும் 150-டன் வரை எரிபொருள் பயன்பாட்டிற்கு என தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் சிமெண்ட் ஆலைகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகின்றன. இதனை அதிகரிக்கும் பொருட்டு தினமும் 200 டன் வரை குப்பைகள் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைகள் விரைவில் குறையும்" என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...