கோவை வந்தார் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு- மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்து…!

இரவு கோவையில் தங்கும் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, நாளை காலை வானிலை பொறுத்து ஹெலிகாப்டர் அல்லது சாலை மார்க்கமாக உதகமண்டலம் செல்கிறார்.


கோவை: உலகமண்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இந்திய துணை குடியரசு வெங்கையா நாயுடு கோவை வந்தார்.

அபுதாபியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்த துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார், மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து, இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் உதகமண்டலம் செல்ல திட்டமிட்ட நிலையில், ஊட்டி, குன்னூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக அவர் கோவை விருந்தினர் மாளிகைக்கு வந்தார். இரவு கோவையில் தங்கும் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, நாளை காலை வானிலை பொறுத்து ஹெலிகாப்டர் அல்லது சாலை மார்க்கமாக உதகமண்டலம் செல்கிறார்.

அதன் பின் ராணுவ கல்லூரிக்குச் செல்கிறார், அங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றும் அவர், பின் ராஜ்பவன் சென்றடைகிறார். அதனைத் தொடர்ந்து மே (18), புதன்கிழமை காலை லாரன்ஸ் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றுகிறார்.

அதனைத் தொடர்ந்து தனியார் கல்வி நிறுவனம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். பிறகு மீண்டும் ராஜ்பவன் சென்று ஓய்வெடுக்கும் அவர், மே 19 (வியாழக்கிழமை) உதகமண்டலத்தில் ஓய்வெடுக்கிறார்.

பிறகு மீண்டும் மே 20 வெள்ளிக் கிழமை அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் வருகிறார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். தொடர் மழை காரணமாக பயண திட்டத்தில் மாறுதல்கள் ஏற்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...