கோவை வந்தார் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு- மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்து…!

இரவு கோவையில் தங்கும் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, நாளை காலை வானிலை பொறுத்து ஹெலிகாப்டர் அல்லது சாலை மார்க்கமாக உதகமண்டலம் செல்கிறார்.


கோவை: உலகமண்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இந்திய துணை குடியரசு வெங்கையா நாயுடு கோவை வந்தார்.

அபுதாபியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்த துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார், மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து, இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் உதகமண்டலம் செல்ல திட்டமிட்ட நிலையில், ஊட்டி, குன்னூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக அவர் கோவை விருந்தினர் மாளிகைக்கு வந்தார். இரவு கோவையில் தங்கும் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, நாளை காலை வானிலை பொறுத்து ஹெலிகாப்டர் அல்லது சாலை மார்க்கமாக உதகமண்டலம் செல்கிறார்.

அதன் பின் ராணுவ கல்லூரிக்குச் செல்கிறார், அங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றும் அவர், பின் ராஜ்பவன் சென்றடைகிறார். அதனைத் தொடர்ந்து மே (18), புதன்கிழமை காலை லாரன்ஸ் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றுகிறார்.

அதனைத் தொடர்ந்து தனியார் கல்வி நிறுவனம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். பிறகு மீண்டும் ராஜ்பவன் சென்று ஓய்வெடுக்கும் அவர், மே 19 (வியாழக்கிழமை) உதகமண்டலத்தில் ஓய்வெடுக்கிறார்.

பிறகு மீண்டும் மே 20 வெள்ளிக் கிழமை அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் வருகிறார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். தொடர் மழை காரணமாக பயண திட்டத்தில் மாறுதல்கள் ஏற்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...