சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் மாடு மேய்க்க சென்ற மூதாட்டியிடம் 5-சவரன் செயின் பறித்து தப்பி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை எஸ்.எஸ்.குளம் கள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பன்ன கவுண்டர், இவரது மனைவி மயிலாத்தாள் (79). இவர்கள் தங்கள் பூர்வீக நிலத்தில் விவசாயம் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மயிலாத்தாள் மாடு மேய்ப்பதற்காக தோட்டத்தின் அருகே உள்ள சூரியன் அப்பிச்சி தோட்டத்தின் அருகே வந்து மாடுகளை கட்டிவிட்டு, அமர்ந்திருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் அந்த பகுதியில் விற்பனைக்கு நிலம் உள்ளதா? என கேட்டு பேசிக் கொண்டே இருந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து கிளம்புவதாக கூறிய மர்ம நபர் சிறிது தூரம் சென்று விட்டு மீண்டும் வந்து மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 5-சவரன் செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்றார்.
இதனால் மயிலாத்தாள் சத்தம் போட்டதால் அங்கு பணியில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். ஆனால் அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
கோவை எஸ்.எஸ்.குளம் கள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பன்ன கவுண்டர், இவரது மனைவி மயிலாத்தாள் (79). இவர்கள் தங்கள் பூர்வீக நிலத்தில் விவசாயம் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மயிலாத்தாள் மாடு மேய்ப்பதற்காக தோட்டத்தின் அருகே உள்ள சூரியன் அப்பிச்சி தோட்டத்தின் அருகே வந்து மாடுகளை கட்டிவிட்டு, அமர்ந்திருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் அந்த பகுதியில் விற்பனைக்கு நிலம் உள்ளதா? என கேட்டு பேசிக் கொண்டே இருந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து கிளம்புவதாக கூறிய மர்ம நபர் சிறிது தூரம் சென்று விட்டு மீண்டும் வந்து மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 5-சவரன் செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்றார்.
இதனால் மயிலாத்தாள் சத்தம் போட்டதால் அங்கு பணியில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். ஆனால் அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.