கோவையில் மாடு மேய்க்க சென்ற மூதாட்டியிடம் 5-சவரன் செயின் பறிப்பு…!

சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் மாடு மேய்க்க சென்ற மூதாட்டியிடம் 5-சவரன் செயின் பறித்து தப்பி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை எஸ்.எஸ்.குளம் கள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பன்ன கவுண்டர், இவரது மனைவி மயிலாத்தாள் (79). இவர்கள் தங்கள் பூர்வீக நிலத்தில் விவசாயம் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மயிலாத்தாள் மாடு மேய்ப்பதற்காக தோட்டத்தின் அருகே உள்ள சூரியன் அப்பிச்சி தோட்டத்தின் அருகே வந்து மாடுகளை கட்டிவிட்டு, அமர்ந்திருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் அந்த பகுதியில் விற்பனைக்கு நிலம் உள்ளதா? என கேட்டு பேசிக் கொண்டே இருந்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து கிளம்புவதாக கூறிய மர்ம நபர் சிறிது தூரம் சென்று விட்டு மீண்டும் வந்து மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 5-சவரன் செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்றார்.

இதனால் மயிலாத்தாள் சத்தம் போட்டதால் அங்கு பணியில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். ஆனால் அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...