தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு காற்றாலை மின் உற்பத்தியை நிறுத்த தமிழக அரசு உத்தரவு: தொழில் துறையினர் அதிர்ச்சி..!

காற்று நன்றாக வீசி வரும் நிலையில் தமிழக அரசு காற்றாலை மின் உற்பத்தியை மூன்றில் ஒரு பங்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது, காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு காற்றாலை மின் உற்பத்தியை நிறுத்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது, தொழில் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோடை காலத்தில் தினசரி மின் தேவை 17 ஆயிரம் மெகாவாட்டை கடந்துள்ள நிலையில், தமிழக அரசு காற்றாலை மின் உற்பத்தியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது, தொழில் துறையினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கின்றன.

தமிழகத்தில் 8,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில், காற்றாலை மின் உற்பத்தி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தைவிட ஒரு மாதத்திற்கு முன்னரே மார்ச் 15ல் காற்றாலை மின் உற்பத்திக்கான சீசன் துவங்கியுள்ளது.

கோடை வெயிலின் தாக்கத்தால் தமிழகத்தில் தினசரி மின் நுகர்வு 17 ஆயிரம் மெகாவாட்டை கடந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தமிழக அரசு காற்றாலை நிறுத்தி வைக்க (Grid Curtailment) தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, தொழில்துறையினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்கத்தினர் கூறியதாவது:-

இந்தியா மட்டுமின்றி நாடு முழுவதும் மின் தேவை அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் மின் தடை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. தினசரி மின் நுகர்வு 17 ஆயிரம் மெகாவாட்டை கடந்துள்ளது. தினசரி மின் நுகர்வில் காற்றாலைகள் 30 சதவீத பங்களிப்பை அளித்து வருகின்றன.

காற்று நன்றாக வீசி வரும் நிலையில், தமிழக அரசு காற்றாலை மின் உற்பத்தியை மூன்றில் ஒரு பங்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.

இது தொழில்துறையினர் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையாக கிடைக்கும் காற்றைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மின்சாரம் உற்பத்தி செய்து தரும் காற்றாலைகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும்.

தமிழகத்தின் தேவை போக அதிகமுள்ள மின்சாரத்தை பிற துறைகள் அல்லது பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்யலாம். கடந்த வாரம் ஒருநாள் தேவை போக அதிகம் இருந்த மின்சாரத்தை 4.5 லட்சம் யூனிட் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விற்பனை செய்து வருவாய் ஈட்டி உள்ளது. எனவே, எதிர்வரும் நாட்களிலும் அதிகமாக வீசும் காற்றை பயன்படுத்தி காற்றாலைகள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை பெற்று தமிழக தேவை போக மீதமுள்ளவற்றை விற்பனை செய்தால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு நல்ல முறையில் வருவாய் ஈட்ட முடியும்.

காற்றாலைகளை நிறுத்தி வைப்பது என்பது ஏற்புடையது அல்ல. தமிழக அரசு இப்பிரச்சினை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...