தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு காற்றாலை மின் உற்பத்தியை நிறுத்த தமிழக அரசு உத்தரவு: தொழில் துறையினர் அதிர்ச்சி..!

காற்று நன்றாக வீசி வரும் நிலையில் தமிழக அரசு காற்றாலை மின் உற்பத்தியை மூன்றில் ஒரு பங்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது, காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு காற்றாலை மின் உற்பத்தியை நிறுத்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது, தொழில் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோடை காலத்தில் தினசரி மின் தேவை 17 ஆயிரம் மெகாவாட்டை கடந்துள்ள நிலையில், தமிழக அரசு காற்றாலை மின் உற்பத்தியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது, தொழில் துறையினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கின்றன.

தமிழகத்தில் 8,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில், காற்றாலை மின் உற்பத்தி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தைவிட ஒரு மாதத்திற்கு முன்னரே மார்ச் 15ல் காற்றாலை மின் உற்பத்திக்கான சீசன் துவங்கியுள்ளது.

கோடை வெயிலின் தாக்கத்தால் தமிழகத்தில் தினசரி மின் நுகர்வு 17 ஆயிரம் மெகாவாட்டை கடந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தமிழக அரசு காற்றாலை நிறுத்தி வைக்க (Grid Curtailment) தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, தொழில்துறையினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்கத்தினர் கூறியதாவது:-

இந்தியா மட்டுமின்றி நாடு முழுவதும் மின் தேவை அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் மின் தடை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. தினசரி மின் நுகர்வு 17 ஆயிரம் மெகாவாட்டை கடந்துள்ளது. தினசரி மின் நுகர்வில் காற்றாலைகள் 30 சதவீத பங்களிப்பை அளித்து வருகின்றன.

காற்று நன்றாக வீசி வரும் நிலையில், தமிழக அரசு காற்றாலை மின் உற்பத்தியை மூன்றில் ஒரு பங்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.

இது தொழில்துறையினர் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையாக கிடைக்கும் காற்றைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மின்சாரம் உற்பத்தி செய்து தரும் காற்றாலைகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும்.

தமிழகத்தின் தேவை போக அதிகமுள்ள மின்சாரத்தை பிற துறைகள் அல்லது பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்யலாம். கடந்த வாரம் ஒருநாள் தேவை போக அதிகம் இருந்த மின்சாரத்தை 4.5 லட்சம் யூனிட் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விற்பனை செய்து வருவாய் ஈட்டி உள்ளது. எனவே, எதிர்வரும் நாட்களிலும் அதிகமாக வீசும் காற்றை பயன்படுத்தி காற்றாலைகள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை பெற்று தமிழக தேவை போக மீதமுள்ளவற்றை விற்பனை செய்தால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு நல்ல முறையில் வருவாய் ஈட்ட முடியும்.

காற்றாலைகளை நிறுத்தி வைப்பது என்பது ஏற்புடையது அல்ல. தமிழக அரசு இப்பிரச்சினை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...