கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று, தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சோகம்!

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை:கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் மல்லையசாமி (63). டெய்லர் கடை நடத்தி வந்தார். இவருக்கு பவானி சங்கர் (38), சத்திய நாராயணன் என்ற இரு மகன்கள் உள்ளனர். மனைவி விஜயலட்சுமி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

மூத்த மகன் பவானி சங்கர் மனநலம் பாதிக்கப்பட்டவர். அடிக்கடி தனது வீட்டில் இருக்கும் பொருட்களை அடித்து உடைத்து வந்ததாகவும், அவ்வப்போது வெளி ஆட்களை தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது.

மனைவி இறந்ததற்கு பிறகு இரு மகன்களையும் மல்லையசாமி கவனித்து வந்தார். ஒரு கட்டத்தில் மூத்த மகனை கவனிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த மல்லையசாமி நேற்று இரவு மகன் பவானி சங்கருக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம்குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மல்லையசாமி இரவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து பவானி சங்கருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அவரும் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...