கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று, தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சோகம்!

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை:கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் மல்லையசாமி (63). டெய்லர் கடை நடத்தி வந்தார். இவருக்கு பவானி சங்கர் (38), சத்திய நாராயணன் என்ற இரு மகன்கள் உள்ளனர். மனைவி விஜயலட்சுமி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

மூத்த மகன் பவானி சங்கர் மனநலம் பாதிக்கப்பட்டவர். அடிக்கடி தனது வீட்டில் இருக்கும் பொருட்களை அடித்து உடைத்து வந்ததாகவும், அவ்வப்போது வெளி ஆட்களை தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது.

மனைவி இறந்ததற்கு பிறகு இரு மகன்களையும் மல்லையசாமி கவனித்து வந்தார். ஒரு கட்டத்தில் மூத்த மகனை கவனிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த மல்லையசாமி நேற்று இரவு மகன் பவானி சங்கருக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம்குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மல்லையசாமி இரவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து பவானி சங்கருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அவரும் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...