நடந்து வரும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் இந்த மாதம் முடிய உள்ள நிலையில், மதிப்பீட்டு பணிகளுக்கான மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக முதன்மை கல்வி அலுவலர் கீதா தெரிவித்துள்ளார்.
கோவை:பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. இம்மாத இறுதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. அடுத்த மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. தேர்வுகள் முடிந்தவுடன் மதிப்பீட்டு பணிகள் துவங்க மையங்கள் தேர்வு செய்து, உரிய வசதிகள், பாதுகாப்புகள் இருப்பதை உறுதி செய்யும் பணி நடந்து வருகிறது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், ''பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்ய வி.சி.வி.சிசு வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ஸ்ரீ சௌடேஸ்வரி வித்யாலயா பள்ளி, பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் பள்ளி ஆகிய மூன்று மையங்களும், பத்தாம் வகுப்பு மதிப்பீட்டு பணிக்கு கே.கே நாயுடு, சி.எஸ்.ஐ., மெட்ரிக், நாச்சியார் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இம்மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், ''பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்ய வி.சி.வி.சிசு வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ஸ்ரீ சௌடேஸ்வரி வித்யாலயா பள்ளி, பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் பள்ளி ஆகிய மூன்று மையங்களும், பத்தாம் வகுப்பு மதிப்பீட்டு பணிக்கு கே.கே நாயுடு, சி.எஸ்.ஐ., மெட்ரிக், நாச்சியார் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இம்மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.