வால்பாறையில் உள்ள அண்ணா நகர் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் சுமார் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி வழிபாடு செய்தனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் மிக பிரசித்தி பெற்ற சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் முத்து மாரியம்மன் கோயில் திருவிழா மூன்று நாட்களாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

முன்னதாக கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் பக்தர்கள் சாமி கும்பிட்டு பூஜை செய்து முளைப்பாரி ஊர்வலமாக கொண்டு வந்து கோயில் திருக்கோயிலில் பூஜை செய்து பின்னர் பக்தர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் சிறு குழந்தைகளுடன் தீ குண்டத்தில் இறங்கினர்.

இதை ஏராளமான ஜனங்கள் அரோகரா அரோகரா கோவிந்தா என்று முழக்கம் எழுப்பி சாமி கும்பிட்டு தரிசனம் செய்தனர் கொரோனா பெருந்தொற்று மக்கள் பாதிக்காமல் இருக்கவும் நாட்டில் நன்கு மழை பெய்யவும் விவசாயம் செழிக்கவும் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் பக்தர்கள் சாமி கும்பிட்டு பூஜை செய்து முளைப்பாரி ஊர்வலமாக கொண்டு வந்து கோயில் திருக்கோயிலில் பூஜை செய்து பின்னர் பக்தர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் சிறு குழந்தைகளுடன் தீ குண்டத்தில் இறங்கினர்.
இதை ஏராளமான ஜனங்கள் அரோகரா அரோகரா கோவிந்தா என்று முழக்கம் எழுப்பி சாமி கும்பிட்டு தரிசனம் செய்தனர் கொரோனா பெருந்தொற்று மக்கள் பாதிக்காமல் இருக்கவும் நாட்டில் நன்கு மழை பெய்யவும் விவசாயம் செழிக்கவும் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.