கோவையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – வடமாநில இளைஞர் போக்சோவில் கைது!

கோவையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில இளைஞரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நசுருதீன் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது நாளடைவில் காதலாக மாறி 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும், பழகி வந்தனர். இந்த நிலையில் நசுருதீன் கடந்த 10-ந் தேதி சிறுமியிடம் திருமண ஆசை காட்டி அவரை பெங்களூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அறை எடுத்து தங்கி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி மாயமானது குறித்து அவரது பெற்றோர் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். அப்போது சிறுமி கர்நாடக மாநிலம் மைசூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று இளைஞருடன் இருந்த சிறுமியை மீட்டனர். பின்னர் சிறுமியை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நசுருதீன் சிறுமிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து மேற்கு அனைத்து மகளிர் போலீசார் நசுருதீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...