பொள்ளாச்சி அருகில் மீன்கரை சாலையிலுள்ள குளத்துப்புதூர் பிரிவு பகுதியில் பைக் மீது டெம்போ வேன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி, 3 மாத குழந்தை உள்பட 2 பேர் காயமடைந்த சம்பவம் நடந்துள்ளது.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்தவர் இமான் உசேன்(29).
இவர் தனது மனைவி நஸ்ரின் (26) மற்றும் மூன்று மாத ஆண் குழந்தையுடன் வடக்கஞ்சேரி பகுதியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது மீன்கரை சாலையில் குளத்துப்புதூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது குளத்துப்புதூர் பிரிவில் இருந்து வந்த டெம்போ வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற இமான் உசேன் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் படுகாயமடைந்த நஸ்ரின் மற்றும் 3 வயது ஆண் குழந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற ஆனைமலை போலீசார் உயிரிழந்த இமான் உசேன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் தனது மனைவி நஸ்ரின் (26) மற்றும் மூன்று மாத ஆண் குழந்தையுடன் வடக்கஞ்சேரி பகுதியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது மீன்கரை சாலையில் குளத்துப்புதூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது குளத்துப்புதூர் பிரிவில் இருந்து வந்த டெம்போ வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற இமான் உசேன் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் படுகாயமடைந்த நஸ்ரின் மற்றும் 3 வயது ஆண் குழந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற ஆனைமலை போலீசார் உயிரிழந்த இமான் உசேன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.