பொள்ளாச்சி அருகே பைக் மீது டெம்போ வேன் மோதி விபத்து - ஒருவர் பலி, மூன்று மாத குழந்தை உள்பட 2 பேர் காயம்!

பொள்ளாச்சி அருகில் மீன்கரை சாலையிலுள்ள குளத்துப்புதூர் பிரிவு பகுதியில் பைக் மீது டெம்போ வேன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி, 3 மாத குழந்தை உள்பட 2 பேர் காயமடைந்த சம்பவம் நடந்துள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்தவர் இமான் உசேன்(29).

இவர் தனது மனைவி நஸ்ரின் (26) மற்றும் மூன்று மாத ஆண் குழந்தையுடன் வடக்கஞ்சேரி பகுதியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது மீன்கரை சாலையில் குளத்துப்புதூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது குளத்துப்புதூர் பிரிவில் இருந்து வந்த டெம்போ வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற இமான் உசேன் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் படுகாயமடைந்த நஸ்ரின் மற்றும் 3 வயது ஆண் குழந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற ஆனைமலை போலீசார் உயிரிழந்த இமான் உசேன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...