கோவை உள்ளுர் திட்டக்குழுமத்தின் அங்கீகார அதிகார உச்ச வரம்பு உயர்வுக்கு கோவை கிரெடாய் அமைப்பு வரவேற்பு..!

கோவை மற்றும் பிற மாவட்டங்களின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும். நன்மை அளிக்கக்கூடிய இந்த அரசின் முடிவை கிரெடாய் அமைப்பு வரவேற்கிறது.


கோவை: கோவையில் உள்ள உள்ளூர் திட்டக் குழுமத்தின் ஒப்புதல் அங்கீகார வரம்பை உயர்த்த வேண்டும் என அவ்வப்போது கோவை கிரெடாய் அமைப்பு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறது.

சமீபத்தில் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி மற்றும் நகர நகர்ப்புற துறை எண் 1858/UD2/2022-1 தேதி 21.04.2022 கொண்ட கடிதத்தின் படி ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, கோவை மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கோவை உள்ளூர் திட்டக் குழுமத்தின் இணை இயக்குநர் அதிக உயரமில்லாத கட்டிடங்கள் பிரிவில் (Non-High-Rise Buildings) குடியிருப்பு, வணிக மற்றும் தொழிற்சாலைகளுக்கான கட்டிடங்களுக்கு, 40,000-சதுர அடி வரை அனுமதி அளிக்கலாம்.

இதுகுறித்து கோவை கிரெடாய் அமைப்பின் தலைவர் குகன் இளங்கோ கூறுகையில்:-



மக்களுக்கு வெகுவாக நன்மை அளிக்கக்கூடிய இந்த அரசின் முடிவை கிரெடாய் அமைப்பு வரவேற்கிறது. இதனால் கட்டிடங்களுக்கு அனுமதி விரைவாக கிடைக்கப் பெற்று கோவை மற்றும் பிற மாவட்டங்களின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

மேலும், தமிழக அரசு 01.05.2022 முதல் சி.எம்.டி.ஏ மற்றும் டி.டி.சி.பி. சென்னையில் ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்குவதை நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்த ஒற்றைச் சாளர முறையானது சம்பந்தப்பட்ட துறைகளின் செயல்பாட்டை திறம்பட ஒருங்கிணைத்து பொதுமக்கள் கட்டிடங்களுக்கு விரைவான ஒப்புதல் பெற வழிவகுக்கும் என்றார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...