கோவையில் இரு சக்கர வாகனத்தை லாவகமாக திருடிய மர்ம நபர் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!

தனியார் அலுவலகம் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை லாவகமாக திருடி செல்லும் காட்சிகள் குறித்து துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவையில் தனியார் அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை லாவகமாக திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை நல்லாம்பாளயம் பகுதியில் அமைந்துள்ள, கல்பனா டிரேடர்ஸ் நிறுவன உரிமையாளர், கணேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை, அவரது நிறுவனத்தின் வாயிலில் நிறுத்தியுள்ளார். 



இந்த நிலையில், சிறிது நேரம் கழித்து அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த போது நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி கணேஷ் குமார், அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்துள்ளார். 

அப்போது, அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர், மதியம் சுமார் 1.40 மணியவில் இருசக்கர வாகனத்தை லாவகமாக ஒருவர் திருடி செல்வது CCTV யில் பதிவாகி இருந்தது.



தன்னுடைய இருசக்கர வாகனத்தை லாவகமாக திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்ததை பார்த்து அதிர்சியடைந்த அவர், அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வைராலகி வருகிறது. மேலும்,அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவையில் பூட்டி வைத்த வாகனங்களை கூட லாவகமாக திருடி செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொதுமக்கள்,

வாகன திருட்டுகளில் ஈடுபடும் கும்பலகளை கண்டறிந்து அவர்களை கைது செய்ய வேண்டும் என காவல் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இல்லையேல், வீட்டின் அல்லது கடையின் முன்பு வாகனங்களை நிறுத்துவதில் பெரும் சிக்கல் ஏற்படும் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...