கோவையில் இரு சக்கர வாகனத்தை லாவகமாக திருடிய மர்ம நபர் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!

தனியார் அலுவலகம் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை லாவகமாக திருடி செல்லும் காட்சிகள் குறித்து துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவையில் தனியார் அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை லாவகமாக திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை நல்லாம்பாளயம் பகுதியில் அமைந்துள்ள, கல்பனா டிரேடர்ஸ் நிறுவன உரிமையாளர், கணேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை, அவரது நிறுவனத்தின் வாயிலில் நிறுத்தியுள்ளார். 



இந்த நிலையில், சிறிது நேரம் கழித்து அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த போது நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி கணேஷ் குமார், அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்துள்ளார். 

அப்போது, அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர், மதியம் சுமார் 1.40 மணியவில் இருசக்கர வாகனத்தை லாவகமாக ஒருவர் திருடி செல்வது CCTV யில் பதிவாகி இருந்தது.



தன்னுடைய இருசக்கர வாகனத்தை லாவகமாக திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்ததை பார்த்து அதிர்சியடைந்த அவர், அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வைராலகி வருகிறது. மேலும்,அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவையில் பூட்டி வைத்த வாகனங்களை கூட லாவகமாக திருடி செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொதுமக்கள்,

வாகன திருட்டுகளில் ஈடுபடும் கும்பலகளை கண்டறிந்து அவர்களை கைது செய்ய வேண்டும் என காவல் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இல்லையேல், வீட்டின் அல்லது கடையின் முன்பு வாகனங்களை நிறுத்துவதில் பெரும் சிக்கல் ஏற்படும் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...