வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன ஆர்வலர்கள் முன்னிலையில் மாவட்ட மருத்துவ அலுவலர் சுகுமார், இறந்த யானைக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டார். அதில், யானைக்கு கல்லீரல் அலர்ஜி நோய் இருந்தது கண்டறியப்பட்டது.
கோவை சிறுமுகை வனப்பகுதியில் உயிரிழந்த யானைக்கு கல்லீரல் அலர்ஜி நோய் இருந்ததாக, பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை சிறுமுகை வனச்சரகம் பெத்திக்குட்டை வனப்பகுதியில் நேற்று சுமார் 12 வயது மதிக்கத்தக்க ஆண் யானை சடலமாக கண்டறியப்பட்டது. இந்நிலையில் இறந்த ஆண் யானைக்கு இன்று உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.