கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம் - உறுதி மொழி எடுத்து கொண்ட செவிலியர்கள்..!

இந்த உறுதி மொழியின் போது மெழுகுவர்த்தியை ஏந்தி சாதி, மதம், இனம், மொழி எந்தப் பாகுபாடுமின்றி நோயாளிகளை கனிவுடன் கவனிப்போம் என உறுதி தெரிவித்தனர்.



கோவை: ஆண்டுதோறும் மே 12-ஆம் தேதியன்று இந்த சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளே உலகம் முழுக்க செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் செவிலியர்களை கௌரவிக்கும் விதமாக மருத்துவமனைகளில் செவிலியர் பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.

அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் உள்ள செவிலியர் பள்ளியில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர்களின் சார்பில் செவிலியர் தினம் உறுதிமொழி ஏற்று கொள்ளப்பட்டது.



மருத்துவமனை முதல்வர் நிர்மலா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நைட்டிங்கேல் அம்மையாரின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.



இதில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செவிலியர்கள் செவிலியர் உறுதி மொழி எடுத்தனர்.



இந்த உறுதி மொழியின் போது மெழுகுவர்த்தியை ஏந்தி சாதி மதம் இனம் மொழி எந்தப் பாகுபாடுமின்றி நோயாளிகளை கனிவுடன் கவனிப்போம் என உறுதி தெரிவித்தனர்.



இந்நிகழ்வில் செவிலியர் மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...