இந்த உறுதி மொழியின் போது மெழுகுவர்த்தியை ஏந்தி சாதி, மதம், இனம், மொழி எந்தப் பாகுபாடுமின்றி நோயாளிகளை கனிவுடன் கவனிப்போம் என உறுதி தெரிவித்தனர்.
கோவை: ஆண்டுதோறும் மே 12-ஆம் தேதியன்று இந்த சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளே உலகம் முழுக்க செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் செவிலியர்களை கௌரவிக்கும் விதமாக மருத்துவமனைகளில் செவிலியர் பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.
அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் உள்ள செவிலியர் பள்ளியில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர்களின் சார்பில் செவிலியர் தினம் உறுதிமொழி ஏற்று கொள்ளப்பட்டது.
மருத்துவமனை முதல்வர் நிர்மலா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நைட்டிங்கேல் அம்மையாரின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செவிலியர்கள் செவிலியர் உறுதி மொழி எடுத்தனர்.
இந்த உறுதி மொழியின் போது மெழுகுவர்த்தியை ஏந்தி சாதி மதம் இனம் மொழி எந்தப் பாகுபாடுமின்றி நோயாளிகளை கனிவுடன் கவனிப்போம் என உறுதி தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் செவிலியர் மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.