கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ்…!

மருத்துவமனையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க மருத்துவமனை முதல்வருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ்.


கோவை: கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க மருத்துவமனை முதல்வருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.

கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுமார் 300 தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.325-வழங்கப்படுகிறது.



கோவை மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.475-வழங்கப்பட்டு வரும் நிலையில் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இன்னும் ஊதிய உயர்வு செய்யவில்லை, மேலும் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் முறையாக இல்லை எனக் கூறி சமூக நீதிக்கட்சி தலைவர் பன்னீர்செல்வம், தூய்மை பணியாளர்களுடன் ஆட்சியரிடம் மனு அளித்தார். மேலும், இது குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் மனுவை விசாரித்த ஆணையம், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியம், அடிப்படை வசதிகள் குறித்து 15-நாட்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.

விளக்கமளிக்க தவறினால் சட்டப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...