மருத்துவமனையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க மருத்துவமனை முதல்வருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ்.
கோவை: கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க மருத்துவமனை முதல்வருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.
கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுமார் 300 தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.325-வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.475-வழங்கப்பட்டு வரும் நிலையில் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இன்னும் ஊதிய உயர்வு செய்யவில்லை, மேலும் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் முறையாக இல்லை எனக் கூறி சமூக நீதிக்கட்சி தலைவர் பன்னீர்செல்வம், தூய்மை பணியாளர்களுடன் ஆட்சியரிடம் மனு அளித்தார். மேலும், இது குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் மனுவை விசாரித்த ஆணையம், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியம், அடிப்படை வசதிகள் குறித்து 15-நாட்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.
விளக்கமளிக்க தவறினால் சட்டப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுமார் 300 தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.325-வழங்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.475-வழங்கப்பட்டு வரும் நிலையில் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இன்னும் ஊதிய உயர்வு செய்யவில்லை, மேலும் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் முறையாக இல்லை எனக் கூறி சமூக நீதிக்கட்சி தலைவர் பன்னீர்செல்வம், தூய்மை பணியாளர்களுடன் ஆட்சியரிடம் மனு அளித்தார். மேலும், இது குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் மனுவை விசாரித்த ஆணையம், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியம், அடிப்படை வசதிகள் குறித்து 15-நாட்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.
விளக்கமளிக்க தவறினால் சட்டப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.