திருப்பூர் மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் தென்னம்பாளையம், சந்தைப்பேட்டையில் மேம்படுத்தப்பட்ட மீன் சந்தையை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
திருப்பூர்: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் முடிவற்ற பல்வேறு திட்டப் பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மற்றும் உடுமலைப்பேட்டை ஒன்றியங்களை சேர்ந்த 5 பேரூராட்சிகள் மற்றும் 318 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் 2.17 கோடி மதிப்பீட்டில் தென்னம்பாளையம் சந்தைப்பேட்டையில் மேம்படுத்தப்பட்ட மீன் சந்தை ஆகியவற்றை தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் மாவட்ட ஆட்சியர் வினீத், மாநகராட்சி ஆணையாளர், கிராந்தி குமார் பாடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மற்றும் உடுமலைப்பேட்டை ஒன்றியங்களை சேர்ந்த 5 பேரூராட்சிகள் மற்றும் 318 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் 2.17 கோடி மதிப்பீட்டில் தென்னம்பாளையம் சந்தைப்பேட்டையில் மேம்படுத்தப்பட்ட மீன் சந்தை ஆகியவற்றை தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் மாவட்ட ஆட்சியர் வினீத், மாநகராட்சி ஆணையாளர், கிராந்தி குமார் பாடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.