முதல் கட்ட ஆய்வில் உயிரிழந்த யானைக்கு உடலில், சண்டையிட்டோ, அல்லது துப்பாக்கி குண்டு பாய்ந்தது போன்ற எந்தவிதமான காயங்களும் இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை சிறுமுகை வனச் சரகம் பெத்திக்குட்டை வனப்பகுதியில் இறந்த நிலையில் கண்டறியப்பட்ட ஆண் காட்டு யானைக்கு உடற்கூறு ஆய்வு தொடங்கியது.
கோவை மாவட்ட கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர், வனத்துறை அதிகாரிகள், வன உயிரின தன்னார்வலர்கள் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு தொடங்கியது.
முதல் கட்ட ஆய்வில் உயிரிழந்த யானைக்கு உடலில், சண்டையிட்டோ, அல்லது துப்பாக்கி குண்டு பாய்ந்தது போன்றஎந்தவிதமான காயங்களும் இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அலுவலர் சுகுமார் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து உடல் உறுப்புகளை ஆய்வு செய்யும் பணிகள் துவங்கி உள்ளது.
