திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகில் அறுவடைக்கு தயாராக இருந்த 60 டன் வாழைகள் பலத்த காற்று உடன் கூடிய கன மழைக்கு சேதமடைந்துள்ள நிலையில், உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த வேலம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (47). இவர் ஒரு விவசாயி. பூமலூர் கிராமத்தில் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் நேந்திரன் வாழை பயிரிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பயிரிடப்பட்ட நேந்திரன் வாழை காய்கள் பிடித்து, அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், நேற்று இரவு பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றுக்கு மரங்கள் அனைத்தும் சாய்ந்து சேதமடைந்தன. இதில், கிட்டத்தட்ட 60 டன் வாழைகள் சேதமடைந்துள்ளன.
கேரளாவுக்கு விற்பனைக்கு அனுப்ப இருந்த நிலையில், சேதமடைந்துள்ள நிலையில் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு தான் உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என விவசாயி பாலசுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல், பல்லடம் வட்டாரம் முழுவதும் மழை காரணமாக பரவலாக வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. இது குறித்து ஆய்வு செய்து இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பயிரிடப்பட்ட நேந்திரன் வாழை காய்கள் பிடித்து, அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், நேற்று இரவு பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றுக்கு மரங்கள் அனைத்தும் சாய்ந்து சேதமடைந்தன. இதில், கிட்டத்தட்ட 60 டன் வாழைகள் சேதமடைந்துள்ளன.
கேரளாவுக்கு விற்பனைக்கு அனுப்ப இருந்த நிலையில், சேதமடைந்துள்ள நிலையில் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு தான் உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என விவசாயி பாலசுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல், பல்லடம் வட்டாரம் முழுவதும் மழை காரணமாக பரவலாக வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. இது குறித்து ஆய்வு செய்து இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.