கிணத்துக்கடவு பத்திரப்பதிவு அலுவலகத்தில் மரம் விழுந்ததில் ஒருவருக்கு கால் முறிவு

இன்று கோவை கிணத்துக்கடவு பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்த மரம் திடீரென சாய்ந்ததில், அங்கிருந்த பொதுமக்கள் மீது மரம் விழுந்த விபத்து ஏற்பட்டது. அதில், ஒருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.


கோவை: இன்று கோவை கிணத்துக்கடவு பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்த மரம் திடீரென சாய்ந்ததில், அங்கிருந்த பொதுமக்கள் மீது மரம் விழுந்த விபத்து ஏற்பட்டது. அதில், ஒருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

கோவையில் கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதியில் மழையின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழுந்து வருகிறது.



இந்நிலையில், கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த பரூக் என்பவர் கிணத்துக்கடவு பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வேலை நிமித்தமாக வந்துள்ளார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மரம் ஒன்று முறிந்து அவர் மீது விழுந்துள்ளது. மரம் விழுந்ததில் அவருடைய கால் எழும்பு உடைந்து துண்டானது. அதேபோல், அருகில் இருந்த பெண் ஒருவர் மீதும் மரம் விழுந்ததில், அவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.



உடனே, அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பத்திரப்பதிவுக்கு வந்த நபர் மீது மரம் விழுந்து கால் எலும்பு முறிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்த பொதுமக்கள், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை கண்டறிந்து, அவற்றை முன்கூட்டியே அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை வேண்டும் என்றனர்

மேலும், இன்னும் சில வாரங்களில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெற்கு மேற்கு பருவமழை ஆரம்பிக்க கூடும் என்பதால், இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறையினர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...