கோவை சிறுமுகை வனச் சரகத்தில் இறந்த நிலையில் கண்டறியப்பட்ட 8 வயது ஆண் யானை- வனத்துறை அதிகாரிகள் விசாரணை

கோவை சிறுமுகை வனச்சரகத்தில் 8 வயதான ஆண் யானை ஒன்று இறந்த நிலையில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரக அலுவலர் தலைமையில் தனிக்குழு பெத்திக்குட்டை பிரிவு, வரப்பள்ளம் சரகத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வனப்பகுதியில் சுமார் 8 முதல் 11 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இறந்த நிலையில் கண்டறியப்பட்ட ஆண் யானைக்கு உடற்கூறு ஆய்வு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யானையின் இறப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து உடற்கூறு ஆய்வு முடிந்த பின்னரே தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை வனக் கோட்டத்தில் தொடர்ந்து யானைகள் இறந்து வருவது வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...