உகாண்டா பெண்ணிடம் ரூ.2.67 கோடி மதிப்பிளான போதை மாத்திரைகள் பறிமுதல் - விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அறிக்கை…!

சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த உகாண்டா பெண்ணிடம் ரூ.2.67 கோடி மதிப்பிளான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டதாக, விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


கோவை: சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த உகாண்டா பெண்ணிடம் ரூ.2.67 கோடி மதிப்பிளான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டதாக, விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.



கடந்த 6 ஆம் தேதி சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் போதை பொருட்களுடன் வந்த உகாண்டா நாட்டை சேர்ந்த சான்ட்ரா நன்டேஷா (30) என்ற பெண்ணை விமான நிலைய நுண்ணறிவு போலீசார் பிடித்து சோதனை செய்து, அவர் போதை மாத்திரையுடன் வந்ததை கண்டறிந்தனர்.

இதையடுத்து, இன்று அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சார்ஜா விமானத்தில் வந்த உகாண்டா பெண் தனது வயிற்றில் வைத்து கொண்டு வந்த போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



அதில் 81 மாத்திரையில் சுமார் 892 கிராம் இருந்துள்ளது. அதன் மொத்த மதிப்பு ரூ.2.67 கோடி என்பது கண்டறியபட்டுள்ளது. மேலும், அந்த பெண் கைது செய்யப்பட்டு தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...