சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த உகாண்டா பெண்ணிடம் ரூ.2.67 கோடி மதிப்பிளான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டதாக, விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கோவை: சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த உகாண்டா பெண்ணிடம் ரூ.2.67 கோடி மதிப்பிளான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டதாக, விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 6 ஆம் தேதி சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் போதை பொருட்களுடன் வந்த உகாண்டா நாட்டை சேர்ந்த சான்ட்ரா நன்டேஷா (30) என்ற பெண்ணை விமான நிலைய நுண்ணறிவு போலீசார் பிடித்து சோதனை செய்து, அவர் போதை மாத்திரையுடன் வந்ததை கண்டறிந்தனர்.
இதையடுத்து, இன்று அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சார்ஜா விமானத்தில் வந்த உகாண்டா பெண் தனது வயிற்றில் வைத்து கொண்டு வந்த போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதில் 81 மாத்திரையில் சுமார் 892 கிராம் இருந்துள்ளது. அதன் மொத்த மதிப்பு ரூ.2.67 கோடி என்பது கண்டறியபட்டுள்ளது. மேலும், அந்த பெண் கைது செய்யப்பட்டு தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 6 ஆம் தேதி சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் போதை பொருட்களுடன் வந்த உகாண்டா நாட்டை சேர்ந்த சான்ட்ரா நன்டேஷா (30) என்ற பெண்ணை விமான நிலைய நுண்ணறிவு போலீசார் பிடித்து சோதனை செய்து, அவர் போதை மாத்திரையுடன் வந்ததை கண்டறிந்தனர்.
இதையடுத்து, இன்று அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சார்ஜா விமானத்தில் வந்த உகாண்டா பெண் தனது வயிற்றில் வைத்து கொண்டு வந்த போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதில் 81 மாத்திரையில் சுமார் 892 கிராம் இருந்துள்ளது. அதன் மொத்த மதிப்பு ரூ.2.67 கோடி என்பது கண்டறியபட்டுள்ளது. மேலும், அந்த பெண் கைது செய்யப்பட்டு தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.