கோவை சிங்காநல்லூரில் அமைந்துள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை முன்பு ஒன்றுகூடிய இடதுசாரி மற்றும் முற்போக்கு அமைப்பினர் சாலை நடுவே பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது, பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, நாடு முழுதும் கலவரம் மூண்டது.
இந்த கலவரத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, போலீசாருக்கு உதவ,ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது. தொடர் போராட்டங்கள் வெடித்துள்ள சூழலில், ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவர் தனி ஹெலிகாப்டரில் ஏறி தப்பியோடினார் என கூறப்படுகிறது.
திங்கட்கிழமை, இலங்கையில் நடைபெற்ற கலவரத்தில் மகிந்த ராஜபக்சேவின் வீடு எரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அவரது ராஜினாமாவை கொண்டாடும் விதமாக, கோவையில் இடது சாரி மற்றும் முற்போக்கு அமைப்பினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை மக்களே ராஜபக்சே ராஜினாமா செய்ததை கொண்டாடி வரும் சூழலில், கோவையில் இடது சாரி மற்றும் முற்போக்கு அமைப்புகள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இன்று, கோவை சிங்காநல்லூரில் அமைந்துள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை முன்பு ஒன்றுகூடிய முற்போக்கு அமைப்பினர் சாலை நடுவே பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "1.5 லட்சம் அப்பாவி தமிழகர்களை கொன்று குவித்த ரஜபக்சே உயிருக்கு பயந்து ஒளிந்து கொண்டுள்ளார். சொந்த நாட்டு மக்களாலேயே விரட்டப்படுகிறார். இதனை கொண்டாடும் விதமாகவே பட்டாசுகள் வெடித்தோம்." என்று கூறினர்.
இந்த கலவரத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, போலீசாருக்கு உதவ,ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது. தொடர் போராட்டங்கள் வெடித்துள்ள சூழலில், ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவர் தனி ஹெலிகாப்டரில் ஏறி தப்பியோடினார் என கூறப்படுகிறது.
திங்கட்கிழமை, இலங்கையில் நடைபெற்ற கலவரத்தில் மகிந்த ராஜபக்சேவின் வீடு எரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அவரது ராஜினாமாவை கொண்டாடும் விதமாக, கோவையில் இடது சாரி மற்றும் முற்போக்கு அமைப்பினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை மக்களே ராஜபக்சே ராஜினாமா செய்ததை கொண்டாடி வரும் சூழலில், கோவையில் இடது சாரி மற்றும் முற்போக்கு அமைப்புகள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இன்று, கோவை சிங்காநல்லூரில் அமைந்துள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை முன்பு ஒன்றுகூடிய முற்போக்கு அமைப்பினர் சாலை நடுவே பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "1.5 லட்சம் அப்பாவி தமிழகர்களை கொன்று குவித்த ரஜபக்சே உயிருக்கு பயந்து ஒளிந்து கொண்டுள்ளார். சொந்த நாட்டு மக்களாலேயே விரட்டப்படுகிறார். இதனை கொண்டாடும் விதமாகவே பட்டாசுகள் வெடித்தோம்." என்று கூறினர்.