பணி முடிந்து ரஞ்சித்குமார் தனது இருசக்கர வாகனத்தில், கோவை - அன்னூர் சாலையில் வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம், சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது.
கோவை: சேலம் மாவட்டம் நடுப்பட்டி சேர்ந்தவர் சென்னகிருஷ்ணன் (56). இவரது மகன் ரஞ்சித் குமார் (26). கோவை கணேசபுரம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு பணி முடிந்து ரஞ்சித்குமார் தனது இருசக்கர வாகனத்தில், கோவை - அன்னூர் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது, ராகவேந்திரா கல்யாண மண்டபம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம், சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது.
இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று சித்ரா பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று மதியம் 2 மணி அளவில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு பணி முடிந்து ரஞ்சித்குமார் தனது இருசக்கர வாகனத்தில், கோவை - அன்னூர் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது, ராகவேந்திரா கல்யாண மண்டபம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம், சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது.
இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று சித்ரா பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று மதியம் 2 மணி அளவில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.