கோவையில் சாலையில் சென்ற இருசக்கர வாகனம், மின்கம்பத்தில் மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு…!

பணி முடிந்து ரஞ்சித்குமார் தனது இருசக்கர வாகனத்தில், கோவை - அன்னூர் சாலையில் வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம், சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது.


கோவை: சேலம் மாவட்டம் நடுப்பட்டி சேர்ந்தவர் சென்னகிருஷ்ணன் (56). இவரது மகன் ரஞ்சித் குமார் (26). கோவை கணேசபுரம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு பணி முடிந்து ரஞ்சித்குமார் தனது இருசக்கர வாகனத்தில், கோவை - அன்னூர் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது, ராகவேந்திரா கல்யாண மண்டபம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம், சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று சித்ரா பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று மதியம் 2 மணி அளவில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...