22 கிலோ கஞ்சாவுடன் கோவை வந்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு…!

சட்டவிரோதமாக கிலோ கணக்கில் கஞ்சாவை விற்பனை செய்து வந்த இளையராஜவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதியரசர் லோகேஸ்வரன் தீர்ப்பு வழங்கினார்.


கோவை: 22 கிலோ கஞ்சாவுடன் கோவை வந்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் இளையராஜா (60). இவர் கடந்த 2020 ல், துணிப்பையில் வைத்து கஞ்சாவை விற்பனை செய்ய கோவை வந்துள்ளார். அப்போது, கோவை ரயில்நிலையம் அருகே விற்பனைக்கு காத்திருந்த போது, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர், அவரிடமிருந்து இருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை நிறைவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, சட்டவிரோதமாக கிலோ கணக்கில் கஞ்சாவை விற்பனை செய்து வந்த இளையராஜவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதியரசர் லோகேஸ்வரன் தீர்ப்பு வழங்கினார்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...