22 கிலோ கஞ்சாவுடன் கோவை வந்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு…!

சட்டவிரோதமாக கிலோ கணக்கில் கஞ்சாவை விற்பனை செய்து வந்த இளையராஜவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதியரசர் லோகேஸ்வரன் தீர்ப்பு வழங்கினார்.


கோவை: 22 கிலோ கஞ்சாவுடன் கோவை வந்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் இளையராஜா (60). இவர் கடந்த 2020 ல், துணிப்பையில் வைத்து கஞ்சாவை விற்பனை செய்ய கோவை வந்துள்ளார். அப்போது, கோவை ரயில்நிலையம் அருகே விற்பனைக்கு காத்திருந்த போது, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர், அவரிடமிருந்து இருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை நிறைவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, சட்டவிரோதமாக கிலோ கணக்கில் கஞ்சாவை விற்பனை செய்து வந்த இளையராஜவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதியரசர் லோகேஸ்வரன் தீர்ப்பு வழங்கினார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...