திருப்பூரில் தனியார் உணவகத்தில் சாம்பாரில் கரப்பான் பூச்சி - உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை

திருப்பூரில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் சாப்பாட்டின் போது சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்ததைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அந்த உணவை ஆய்வுக்கு அனுப்பி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் காங்கயம் ரோடு ராக்கியாபாளையத்தை சேர்ந்தவர் கேசவன்.



இவர் இன்று பிற்பகல் திருப்பூர் குமரன் ரோட்டில் செயல்பட்டு வரும் பிரபல அசைவ உணவகத்தில், குடும்பத்துடன் உணவருந்த சென்றார்.

அப்போது, அவர்கள் வாங்கிய சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர்கள், ஓட்டல் உரிமையாளரிடம் கேட்ட பொழுது முறையான பதில் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கேசவன் உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கரப்பான் பூச்சி இருந்த சாம்பாரின் மாதிரியை எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர்.

இதன் முடிவுகள் வந்த பின்னரே அந்த உணவகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



மேலும் சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...