திருப்பூரில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் சாப்பாட்டின் போது சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்ததைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அந்த உணவை ஆய்வுக்கு அனுப்பி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் காங்கயம் ரோடு ராக்கியாபாளையத்தை சேர்ந்தவர் கேசவன்.

இவர் இன்று பிற்பகல் திருப்பூர் குமரன் ரோட்டில் செயல்பட்டு வரும் பிரபல அசைவ உணவகத்தில், குடும்பத்துடன் உணவருந்த சென்றார்.
அப்போது, அவர்கள் வாங்கிய சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர்கள், ஓட்டல் உரிமையாளரிடம் கேட்ட பொழுது முறையான பதில் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கேசவன் உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கரப்பான் பூச்சி இருந்த சாம்பாரின் மாதிரியை எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர்.
இதன் முடிவுகள் வந்த பின்னரே அந்த உணவகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இன்று பிற்பகல் திருப்பூர் குமரன் ரோட்டில் செயல்பட்டு வரும் பிரபல அசைவ உணவகத்தில், குடும்பத்துடன் உணவருந்த சென்றார்.
அப்போது, அவர்கள் வாங்கிய சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர்கள், ஓட்டல் உரிமையாளரிடம் கேட்ட பொழுது முறையான பதில் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கேசவன் உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கரப்பான் பூச்சி இருந்த சாம்பாரின் மாதிரியை எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர்.
இதன் முடிவுகள் வந்த பின்னரே அந்த உணவகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், என்பது குறிப்பிடத்தக்கது.