பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததைக் கண்டித்து வெளியூரிலிருந்து ஓட்டுப் போட வந்த பயணிகள் சாலை மறியல்..!

நீண்டநேரம் காத்திருந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததைக் கண்டித்து வெளியூரிலிருந்து ஓட்டுப் போட வந்த பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு இன்று 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், வால்பாறையில் இருந்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பணிபுரிந்து வரும் பொதுமக்கள் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக, வால்பாறை செல்ல பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.



இந்நிலையில், போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், நீண்டநேரம் காத்திருந்த பயணிகள் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு பாலக்காடு சாலையில், 300க்கும் மேற்பட்ட பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர், அங்குவந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதனையடுத்து, மறியல் காரணமாக சுமார் அரை மணி நேரம் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...