பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததைக் கண்டித்து வெளியூரிலிருந்து ஓட்டுப் போட வந்த பயணிகள் சாலை மறியல்..!

நீண்டநேரம் காத்திருந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததைக் கண்டித்து வெளியூரிலிருந்து ஓட்டுப் போட வந்த பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு இன்று 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், வால்பாறையில் இருந்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பணிபுரிந்து வரும் பொதுமக்கள் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக, வால்பாறை செல்ல பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.



இந்நிலையில், போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், நீண்டநேரம் காத்திருந்த பயணிகள் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு பாலக்காடு சாலையில், 300க்கும் மேற்பட்ட பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர், அங்குவந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதனையடுத்து, மறியல் காரணமாக சுமார் அரை மணி நேரம் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...