கோவை கிணத்துக்கடவு பகுதியில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து ரூ. 20 லட்சம் கொள்ளையடித்த 7 பேர் கைது - 3 பேர் தலைமறைவு..!

இந்த கொள்ளை வழக்கில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்த முக்கிய குற்றவாளிகள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு காந்திநகர் பகுதியில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து ரூ. 20 லட்சம் கொள்ளையடித்த 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 3 பேர் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காந்திநகர் பகுதியில் சேர்நத கல்குவாரி உரிமையாளர் பஞ்சலிங்கம் என்பவர் வீட்டில் கடந்த 15ம் தேதி சொகுசு காரில் வந்த நபர்கள் வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து வீட்டில் இருந்த 20 லட்சம் ரூபாய் பணம் மற்றும் காசோலைகள் ஹார்டுடிஸ்க் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்

இச்சம்பவம் குறித்து கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் பஞ்சலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவு பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ், ஆலந்துறை காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், தலைமை காவலர்கள் கோவிந்தராஜ், ராஜசேகரன் முதல் நிலை காவலர்கள் பிரபாகரன், வினோத் சர்மா மெக்குரி, பிரபு, முத்து, பெண் காவலர் கார்த்திகா ஆகியோர் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான காரின் பதிவு எண்ணை கொண்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்

இந்த நிலையில், நேற்று மாலை கோவை ஈச்சனாரி புறவழிச்சாலை பகுதியில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் கிணத்துக்கடவில் கல் குவாரி உரிமையாளர் வீட்டில் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, காரில் வந்த கோவை சங்கனூர் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (36), கோவை சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (37), கோவை கணபதி பகுதியை சேர்ந்த மோகன்குமார் (30) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் வைத்திருந்த 3 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் விசாரணை நடத்தியதில் பணத்தை கொள்ளையடிக்க உதவியாக இருந்த கிணத்துக்கடவு மதுரைவீரன் கோவில் தெருவைச் சேர்ந்த சதீஷ் (36), பேரூர் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி (47), பகவதி பாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்த் (47), காளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன்(42) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், இந்த கொள்ளை வழக்கில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்த முக்கிய குற்றவாளிகளான கோவை பகுதி ரத்தினபுரி பகுதியை சேர்ந்த மேத்யூ (60), காரணம்பேட்டை பகுதியை சேர்ந்த மகேஸ்வரன், கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பைசல் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இவர்களை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...